விமல் வீரவங்ச 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு

கைத்தொழில் துறை அமைச்சர் விமல் வீரவங்ச 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக கடமையாற்றி பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் தனிமைப்படுத்தலுக்கு உட்பட தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

—–

Related posts