பொன்னியாவது செல்வனாவது லைகா ஓட்டம் ! சினிமா செய்திகள் !

சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராஃப் படம் திரைக்கு வந்து 15 வருடங்கள் ஆகிறது. இதன் 2ம் பாகம் எப்போது உருவாகும் என்று, சமூக வலைத்தளத்தில் ஒரு ரசிகர் கேட்டார். அதற்கு பதிலளித்த சேரன், ‘எல்லோருடைய கேள்வியும் இதுதான். எனக்கும் அதன் 2ம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வரும்’ என்றார். தற்போது சேரன், ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

—————

பொன்னியின் செல்வன் கதையை படமாக்க மணிரத்னம் முயன்று வருகிறார். இதற்கான வேலைகளிலும் அவரது டீம் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. இதில் அமிதாப் பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, மோகன்பாபு உள்பட பலர் நடிக்க பேச்சுவார்த்தையும் நடந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் படத்தை தயாரிக்க இருந்த லைகா நிறுவனம் இந்த படத்திலிருந்து விலகியதாக தெரிகிறது.

இதனால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் காரணமாகவே லைகா விலகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படம் ஒருவேளை கைவிட்டாலும் அடுத்த படத்தை மல்டி ஸ்டார் படமாகவே இயக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

————-

கமல் நடித்த இந்தியன் படத்தின் 2ம் பாகத்தை இயக்குவதற்காக மாதக்கணக்கில் வெளிநாட்டில் ரூம்போட்டு ஸ்கிரிப்ட் தயாரித்து முடித்தார் ஷங்கர். 2ம் பாகத்தில் நடிக்க கமலும் மேக் அப் டெஸ்ட் எடுத்து தயாரானார். கோடிகள் செலவில் அமைக்கப்பட்ட அரங்கில் 2 மாதத்துக்கு முன் ஜரூராக ஷூட்டிங் தொடங்கியது. சில நாள் நடந்த படப்பிடிப்பு திடீரென்று தடைபட்டது.

அரசியலில் கமல் கவனம் செலுத்துவதால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டதாகவும், படத்திற்கான பட்ஜெட் செலவை ஷங்கர் அதிகம் உயர்த்தியதால் தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியதாகவும் அதற்கு காரணங்கள் கூறப்படட்ன. கமலோ, ஷங்கரோ இதுபற்றி வாய் திறக்கல்லை. தற்போது புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியன் 2ம் பாகத்தை ஓரம் கட்டிவிட்டு புதுபடம் இயக்குவதற்கான பணிகளில் ஷங்கர் இறங்கிவிட்டாராம், இதில் விஜய், விக்ரம் இணைந்து நடிக்க உள்ளதாக வும் கூறப்படுகிறது.

சோலோ ஹீரோ படங்களை இயக்கி வந்த ஷங்கர் தற்போது இயக்குனர் ராஜமவுலியை முன்னுதாரணமாக கொண்டு மல்டி ஸ்டார் ஹீரோக்கள் படங்களை இயக்க முடிவு செய்திருக்கிறாராம். இந்தியன் 2ம் பாகத்துக்கு பதிலாக தான் இயக்கவுள்ள மல்டி ஸ்டார் படம் பற்றிய அறிவிப்பை ஷங்கர் விரைவில் வெளியிடுவார் என்று கோலிவுட் முணுமுணுக்கிறது. அடுத்த ஆண்டு சிரஞ்சீவி நடிக்கும் படமொன்றையும் ஷங்கர் இயக்க உள்ளாராம்.

———-

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர் அமலாபால். இது பல சமயம் அவருக்கு எதிராக திசை திரும்பினாலும் அதற்கு பதிலடி தந்துவிட்டு தன் பாணியிலான கமென்ட்களை தொடர்கிறார். நெட்டில் கவர்ச்சி படங்களை அடிக்கடி வெளியிட்டு கிக் ஏற்றி வந்த அமலாபால், தற்போது கவர்ச்சியான வசனமும் எழுதி கிறங்கடித்திருக்கிறார்.

டைட் ஃபிட்டிங்கில் மஞ்சள் டாப்ஸ், கிரே நிற பாவாடை அணிந்து கூலிங் கிளாஸுடன் ஸ்டைலாக நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘நீ எப்படி இருக்க விரும்புகிறாயோ அப்படியே ஆவாய் என்று சிலர் கூறுகிறார்கள். இன்றைக்கு நான் சந்தோஷமான மாங்காயாக இருக்கிறேன்’ என்ற கமென்ட்டுடன் மகிழ்ச்சியான தருணங்கள் என ஹாஷ்டேக் வெளியிட்டிருக்கிறார்.

தான் அணிந்திருக்கும் மஞ்சள் நிற டாப்ஸ் பற்றிதான் அமலாபால் குறிப்பிட்டிருக்கிறார் என்று சிலர் சொன்னாலும் குறும்பு ரசிகர்கள் பலரும் மாங்காய் என்று தனது கவர்ச்சியைத்தான் அமலாபால் குறிப்பிட்டிருக்கிறார் என்கின்றனர். அமலாவின் வில்லங்கமான கமென்ட்டை கண்ட குறும்பு ரசிகர்கள் சிலர், இஷ்டத்துக்கு குசும்பான மெசேஜ்களை பகிர்ந்திருக்கின்றனர்.

Related posts