இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ராஜபக்ச இந்தியா வருகிறார்.

அரசுமுறைப் பயணமாக இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ராஜபக்ச இந்தியா வருகிறார்.

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி ஏற்றதற்குப் பிறகு முதல் முறையாக ராஜ பக்ச வரும் இந்தியப் பயணம் இதுவாகும்.

இதுகுறித்து ராஜபக்சவின் அலுவலகம் தரப்பில், ”ராஜபக்ச இன்று (வெள்ளிக்கிழமை) அரசுமுறைப் பயணமாக இந்தியா செல்கிறார். பெங்களூருவில் நடைபெறும் இலங்கை- இந்தியா நட்புறவு குறித்த நிகழ்ச்சியில் ராஜபக்ச உரையாற்றுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதத்தில் ராஜபக்சவின் இரண்டாவது இந்தியப் பயணம் இதுவாகும். கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா வந்த ராஜபக்ச பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பம்

இலங்கைப் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, கடந்த அக்டோபர் 26-ம் தேதி நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்தார். நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தல் தேதியையும் அறிவித்தார்.

இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக மறுத்தார். மேலும் அதிபர் சிறிசேனாவின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றக் கலைப்பு, பொதுத்தேர்தல் அறிவிப்புக்கு தடை விதித்தது. அதன் பின் நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக ரணில் தலைமையில் 122 எம்.பி.க்கள் கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மஹிந்த ராஜபக்ச பிரதமராகச் செயல்பட தடை விதித்தது. இதைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்..

Related posts