ராகுல்காந்திக்கு நெல்லுக்கும், கோதுமைக்கும் வித்தியாசம் தெரியாது

ராகுல்காந்திக்கு நெல்லுக்கும், கோதுமைக்கும் வித்தியாசம் தெரியாது என்று மத்திய மந்திரி கஜேந்திர சிங் கூறியுள்ளார்.

பா.ஜனதா ஆட்சி செய்யும் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் மாநிலங்களில் விவசாயிகள் பெரும் துயரத்தில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அண்மையில் குற்றம்சாட்டி இருந்தார்.

இதுபற்றி மத்திய வேளாண்துறை ராஜாங்க மந்திரி கஜேந்திர சிங் செகாவத்திடம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில், ‘‘அடிப்படையில் நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். விவசாயிகளின் தலைவர். அவர்களுடைய பிரதிநிதியாக மத்திய மந்திரி சபையிலும் இடம் பெற்றிருக்கிறேன். எனவே நாட்டில் விவசாயத்துறை நன்றாக இருப்பதை அறிவேன். ஆனால் ராகுல்காந்திக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது. நெல்லுக்கும், கோதுமைக்கும் வித்தியாசம் தெரியாத அவரைப் போன்றவர்களின் கருத்துக்கு பதில் சொல்வது சரியானதாக இருக்காது’’ என்று கேலி செய்தார்.

Related posts