சிவாஜிலிங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

இந்தியா- அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கை விவகாரத்தில் இனியும் தலையிடவில்லை என்றால் 13 ஆவது திருத்தச் சட்டமும் இல்லாது போய்விடும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியாவிடம் ஒன்றையே கேட்க விரும்புகின்றோம்.

தற்போது இருக்கின்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிடின் உங்களால் இனி எதனையும் செய்ய முடியாமல் போகும்.

மேலும், இலங்கை தீவுக்குள்ளே பூகோலம் நலன்சார்ந்த பிரச்சினையில் இந்தியா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் சேர்ந்த கோர் அமைப்பாக இருக்கலாம் அல்லது ஐரோப்பியா உள்ளிட்ட ஏதாவது ஒரு அமைப்பு, வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.

குறித்த வாக்கெடுப்பை நடத்துவதன் ஊடாகவே எங்களுடைய மக்களின் தலைவிதியை அவர்களே தீர்மானிக்க கூடிய வாய்ப்பு ஏற்படும். அதுதான் நிரந்தர அரசியல் தீர்வாக இருக்கும்.

ஆகவே இவ்விடயத்தில் இறுக்கமான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

——

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் காணப்படும் உட்கட்சிப் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள், எவ்வாறு தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கப் போகிறார்கள் என முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.

யாழில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, கூட்டமைப்புக்குள்ளே பிரச்சினை இருக்கின்றது. ஆனால் பார்க்கலாம் என்கின்றார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2001 ஆம் ஆண்டு 15 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது.

அப்போது அங்கு நேரப்பிரச்சினை இருக்கவில்லை. அதனை 4 கட்சிகள் அடங்கிய கூட்டு, நாங்கள் கட்சிதமாக கையான்றோம்.

இதேபோன்று 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 4 கட்சிகளுடன் சேர்ந்து, தமிழர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் கூட நியமிக்கப்பட்டனர். அப்போது கூட நேரப்பிரச்சினை இருக்கவில்லை.

போர் நிறைவடைந்த பின்னர் அதாவது 2010க்கு பின்னர்தான் நேரப்பிரச்சினைகள் எழுந்தன. இதன்போது கூட்டமைப்பினைச் சேர்ந்த 13 பேர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால் அப்போது மூன்றில் ஒரு பங்கு, தனியானதொரு குழுவாக செல்வதற்கு உரிய பலம் இருக்கவில்லை. காரணம் 4 ஆசனங்கள் மாத்திரமே கிடைக்கப்பெற்றிருந்தன.

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்திருந்தது. 16 பேர் கொண்ட பாராளுமன்ற குழு தெரிவு செய்யப்பட்டது.

அதில் புளொட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய மூன்று கட்சிகளிலும் தலா இருவராக 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள், தனி பாராளுமன்ற குழுவாக அங்கீகரிக்க வேண்டுமென சபாநாயகரை கோரியிருந்தால் அவர் அங்கீகரித்திருக்க வேண்டும்.

இப்பொழுதும் கூட மொத்த 10 பேரில் மூன்றில் ஒன்று என கூறினால், 4 பேர் இருந்தால் போதுமானதாகும்.

அதாவது தற்போது டெலோவில் மூன்று பேரும் புளொட்டில் ஒருவரும் இருக்கின்றார்கள்.

நீங்கள் கூறினால் அதில் இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக பிரிவு என்று அங்கீகரிப்பார்கள். அப்போது நேரம் கிடைக்கும். இல்லாவிடின் அவர்களுடன் கலந்துரையாடி பெற முடியாவிடின் தருகின்ற நேரத்தை 10 ஆக பிரித்து எங்களுடைய 4 பேரின் நேரத்தை தாருங்கள் என கோரலாம்.

இதனையும் உங்களினால் ஒற்றுமையாக செய்துக்கொள்ள முடியாவிடின், மக்களின் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை பெற்றுக்காடுக்க போகின்றீர்கள்” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts