இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதி

ஆறு, சாமி, சிங்கம் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஹரி காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அருண் விஜய் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வரும் நிலையில் பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹரியுடன் பணியாற்றிய நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

‘கலைப்புலி’ எஸ்.தாணு என்றாலே ‘பிரமாண்டம்’ தான் நினைவுக்கு வரும். இவரும், தேசிய விருது பெற்ற நாயகன் தனுசும் ‘கர்ணன்’ படத்தில் இணைந்து பணிபுரிகிறார்கள்.
தனுஷ், ‘அசுரன்’ படத்தை அடுத்து நடித்துள்ள படம், இது. மாரி செல்வராஜ் டைரக்டு செய்து இருக்கிறார்.தனுசுக்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடித்து இருக்கிறார். இவர் நடிக்கும் முதல் தமிழ் படம் இது. லால், நட்ராஜ், யோகிபாபு, லட்சுமி பிரியா ஆகியோரும் நடித்துள்ளனர்.படத்துக்காக திருநெல்வேலி அருகில் ஒரு கிராமமே உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடந்தது.

தனுசின் ‘கொடி’, ‘வட சென்னை’ ஆகிய படங் களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன், இந்தப் படத்துக்கு இசையமைத்து இருக்கிறார். படத்தை அடுத்த மாதம் (ஏப்ரல்) திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், படத்தில் இடம்பெறும் 3 பாடல்கள் வெளியிடப்பட்டன. அதில், ‘திரவுபதி முத்தம் யாருக்கு?’ என்ற பாடல் வரிகள் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளன. இது தொடர்பாக டைரக்டர் மாரி செல்வராஜூக்கு மிரட்டல்கள் வருவதாக கூறப்படுகிறது.

Related posts