கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருப்பதாக நடிகர் சூர்யா, தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருப்பதாக நடிகர் சூர்யா, தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம்.

அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்” என்று பதிவிட்டுள்ளார்.

Related posts