ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 இலங்கையர்கள் பிரான்ஸில் கொலை

பிரான்சின் நாய்சி லி செக் நகரின் ருரி இமானுவேல் அரகோ வீதியில் உள்ள குடும்பத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த வீதியில் உள்ள மதுபான கூடம் ஒன்றுக்கு படுகாயமடைந்த நிலையில் வந்த இளைஞன் ஒருவர் உதவிக் குழுவை அழைக்கும் படி கோரியுள்ளார்.

அத்துடன் அவர் “எனது மாமா என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்துவிட்டார்” என்றும் அந்த இளைஞர் மதுபானக் கூட நிர்வாகியிடம் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், வீடு முழுவதும் ரத்தம் தெறித்திருக்க 5 பேர் சடலமாக வீழ்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

“சம்பவ இடத்தில் இருந்து கத்தியும், பெரிய சுத்தியலும் மீட்கப்பட்டுள்ளது” என பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் ´கோமா´ நிலையில் இருந்ததாகவும், இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும் பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts