தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிக அளவாக 846 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 6,282 ல் இருந்து 7128 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,967ல் இருந்து 14,753 ஆக உயர்ந்து உள்ளது. இன்று 4 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 94ல் இருந்து 98 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

Related posts