குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய பாகிஸ்தான் பயணிகள் விமானம்

107 பேருடன் விழுந்து நொறுங்கிய பாகிஸ்தான் பயணிகள் விமானம்… அனைவரும் பலி! வெளியான கடைசி நிமிட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில் 99 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் லாகூரில் இருந்து கராச்சி சென்ற விமானம் கராச்சியின் குடியிருப்பு பகுதியில், கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து உள்ளனர்.குடியிருப்பில் விழுந்ததால் அங்கிருந்த மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அதுமட்டுமின்றி விமான விபத்தில் சிக்குவதற்கு முன்னர் சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட விடியோ வைரலாகி வருகிறது.விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதால், இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்கள் இராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்கும் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட டுவீட்டில், விமான விபத்தால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். கராச்சிக்கு புறப்பட்ட பிஐஏ தலைமை நிர்வாக அதிகாரி அர்ஷத் மாலிக் மற்றும் மீட்பு மற்றும் நிவாரண குழுக்களுடன் தொடர்பில் இருக்கிறேன். உடனடி விசாரணை தொடங்கப்படும். இறந்தவரின் குடும்பங்களுக்கு பிரார்த்தனைகள் மற்றும் இரங்கல்கள். இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்தார்

கொரோனா வைரஸால் ஊரடங்கு காரணமாக பாகிஸ்தானில் விமானப் போக்குவரத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கப்பட்ட நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Related posts