கொரோனாவா ? சாதாரண ஜலதோஷமா கண்டுபிடிப்பது எப்படி?

கொரோனாவா ? சாதாரண ஜலதோஷமா கண்டுபிடிப்பது எப்படி? அதை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகளை அமெரிக்கா மற்றும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ளது.

ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது கொரோனா தொற்றா அல்லது சாதாரண ஜலதோஷமா என்பதை கண்டுபிடிப்பதற்காக எளிய விளக்கப்படம் ஒன்றை அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது.

ஒருவருக்கு காய்ச்சலும், இருமலும் இருந்து மூச்சு விட அவர் கஷ்டப்பட்டால், இவைதான் கொரோனா தொற்று இருப்பதற்கான முக்கிய அறிகுறிகள் என்று கூறுகிறது அந்த விளக்கப்படம்.

அமெரிக்க நோய்த்தடுப்பு மையங்கள் மற்றும் தேசிய சுகாதார நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள அந்த வரைபடம், கொரோனா தொற்று, புளு, ஜலதோஷம் மற்றும் ஒவ்வாமை ஆகியவற்றிற்கான அறிகுறிகளை வெளியிட்டு ஒருவருக்கு என்ன தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்பதை கண்டுபிடிக்க உதவுகிறது.அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு, ஆம், இல்லை என பதிலளிப்பதன் மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பதை அறியலாம்.

உங்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பது முதல் கேள்வி. ஆம் என்றால், அது கொரோனாவுக்கான முக்கிய அறிகுறிகளில் ஒன்று. இல்லையென்றால் கொரோனா இருக்க வாய்ப்பு குறைவு.

உங்களுக்கு காய்ச்சல் இருக்கும் பட்சத்தில், அடுத்த கேள்வி, மூச்சு விட சிரமப்படுகிறீர்களா, முழுமையாக மூச்சை இழுத்துவிட முடியவில்லையா என்பது. ஆம் என்றால், உங்களுக்கு கொரோனா இருக்கலாம். இல்லையென்றால், உங்களுக்கு ஏற்பட்டிருப்பது புளுவாக இருக்கலாம்.

கொரோனாவின் மற்ற அறிகுறிகள், இருமல், சோர்வு, பலவீனமாக உணர்தல் ஆகியவையாகும். அதே நேரத்தில் புளுவுக்கான அறிகுறிகளும் இவைதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.ஆகவே, இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுமாறு நீங்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

ஒருவர் உடலில் கொரோனா கிருமிகள் நுழைந்து 2 முதல் 14 நாட்களுக்குள் அவர்களது உடலில் அறிகுறிகள் வெளிப்படையாக தோன்றத்தொடங்கும். அதேபோல், கொரோனா தொற்றிய அனைவருக்குமே ஒரே மாதிரியான அறிகுறிகள் தோன்றும் என்றும் கூற முடியாது, அவை ஆளாளுக்கு மாறுபடும்.

உங்களுக்கு ஏற்பட்டிருப்பது என்ன பிரச்சினை என்பதை உறுதி செய்ய ஒரு மருத்துவரால்தான் முடியும் என்பதால், இத்தகைய அறிகுறிகள் உடையவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகள் குறித்து உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது அதன் விவரம் வருமாறு:-

1.கொரோனா பரவலுக்கு தயாராக இருங்கள்.

* ஒவ்வொரு நபரும் அறிகுறிகளையும் தங்களையும் மற்றவர்களையும் எவ்வாறு பாதுகாப்பது என்பதை அறிந்திருக்க வேண்டும்.

* ஒவ்வொரு சுகாதார ஊழியரும் இந்த நோயை அடையாளம் காணவும், கவனிப்பை வழங்கவும், நோயாளிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்

* ஒவ்வொரு சுகாதார அமைப்பும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும், மேலும் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

2. கண்டறிதல், பாதுகாத்தல் மற்றும் சிகிச்சையளித்தல்.

* வைரஸ் இருக்கும் இடம் உங்களுக்குத் தெரியாவிட்டால் அதை எதிர்த்துப் போராட முடியாது. பரிமாற்றத்தின் சங்கிலிகளை உடைக்க, ஒவ்வொரு பாதிப்பையும் கண்டுபிடித்து, தனிமைப்படுத்தி, சோதித்துப் பாருங்கள்.

* நாம் கண்டுபிடித்து சிகிச்சையளிக்கும் ஒவ்வொரு நபரும் நோயின் விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும்

3. பரிமாற்றத்தைக் குறைக்கவும்.

* இந்த நெருப்பை மட்டும் எரிய விடாதீர்கள். நோயுற்றவர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களின் தொடர்புகளைத் தனிமைப்படுத்தவும். கூடுதலாக, விளையாட்டு நிகழ்வுகளை ரத்து செய்வது போன்ற சமூக தூரத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் பரிமாற்றத்தைக் குறைக்க உதவும். இந்த நடவடிக்கைகள், நிச்சயமாக, உள்ளூர் சூழல் மற்றும் இடர் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும், மேலும் அவை நேரத்திற்குள் இருக்க வேண்டும்.

* நீங்கள் பரிமாற்றத்தை நிறுத்த முடியாவிட்டாலும், அதை மெதுவாக்கி உயிரைக் காப்பாற்றலாம்.

4. புதுமை மற்றும் கற்றுக்கொள்ளுங்கள்.

* இது ஒரு புதிய வைரஸ் மற்றும் ஒரு புதிய நிலைமை. இதனை நாம் அனைவரும் கற்றுக் கொண்டிருக்கிறோம், மேலும் தொற்றுநோய்களைத் தடுக்க, உயிர்களைக் காப்பாற்ற, மற்றும் தாக்கத்தைக் குறைக்க புதிய வழிகளை நாம் அனைவரும் கண்டுபிடிக்க வேண்டும். எல்லா நாடுகளிலும் பகிர்ந்து கொள்ள இதற்கான பாடங்கள் உள்ளன

* நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் தொற்று அபாயத்தைக் குறைக்க நாம் அனைவரும் செய்யக்கூடிய எளிய, பயனுள்ள விஷயங்கள் உள்ளன.

* ஆல்கஹால் சார்ந்த தேய்த்தல் அல்லது சோப்பு மற்றும் தண்ணீரில் உங்கள் கைகளை தவறாமல் சுத்தம் செய்யுங்கள்.

* நீங்கள் இருமல் அல்லது தும்மினால் உங்கள் முழங்கையால் வாய் மற்றும் மூக்கை மூடுங்கள்.

* உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருங்கள்.

* தேவையற்ற பயணம் மற்றும் பெரிய கூட்டங்களை தவிர்க்கவும்.

* உங்கள் உள்ளூர் அல்லது தேசிய சுகாதார அதிகாரத்தின் ஆலோசனையுடன் இணைந்து செயல்படுங்கள்

* நம்பகமான தகவல்களைக் கண்டுபிடித்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

——

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 66 இந்தியர்கள், 17 வெளிநாட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 10 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மும்பையில் ஒருவருக்கும், அகமது நகரில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்களுக்கு மத்திய–மாநில அரசுகள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதை தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா செய்தியாளார்களிடம் கூறியதாவது:-

தும்மல், இருமல் போன்றவற்றால் தான் கொரோனா பரவும். இறந்தவர்களின் சடலத்தின் மூலம் கொரோனா பரவாது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை எரியூட்டுவதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related posts