விஜய்யை வைத்து மீண்டும் படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி

விஜய் நடித்த ‘செந்தூர பாண்டி,’ ‘ரசிகன்,’ ‘தேவா’ ஆகிய மூன்று படங்களை தயாரித்தவர், எஸ்.சேவியர் பிரிட்டோ. இவர், விஜய்யின் நெருங்கிய உறவினர் ஆவார்.

விஜய்யின் ஆரம்ப கால வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். சில வருட இடைவெளிக்குப்பின் இவர், மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இதுபற்றி அவர் சொல்கிறார்:-

“நீண்ட காலத்துக்குப்பின், விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவதில், மகிழ்ச்சி. அவரை வைத்து ஏற்கனவே 3 படங்களை தயாரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ‘பிகில்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறோம் என்பதை அனைவருக்கும் அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்., இது, அவர் நடிக்கும் 64-வது படம்.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இவர், ‘மாநகரம்,’ ‘கைதி’ ஆகிய படங்களை இயக்கியவர். அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படப்பிடிப்பை வருகிற அக்டோபர் மாதம் தொடங்க முடிவு செய்து இருக்கிறோம். படம், 2020-ல் திரைக்கு வரும். இது, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஜனரஞ்சகமான படமாக இருக்கும்.”

Related posts