பிப்.11-ம் தேதி செளந்தர்யா – விசாகன் திருமணம்

பிப்ரவரி 11-ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்த் – விசாகன் திருமணம் சென்னையில் நடைபெறவுள்ளது.

ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த், ‘கோச் சடையான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவருக்கும் தொழிலதிபர் அஸ்வினுக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக் கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

அஸ்வின் – செளந்தர்யா இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். இருவருக்கும் அதிகாரப்பூர்வமாக விவகாரத்தும் ஆனது. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார்.

சில மாதங்களுக்கு முன்பாக செளந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியானது. விசாகன் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகன். இவர் அமெரிக்காவில் படித்தவர். ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும், தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரும் திருமணமாகி விவகாரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது செளந்தர்யா – விசாகன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விசாரித்த போது, “செளந்தர்யா – விசாகன் திருமணம் பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறவுள்ளது” என்று முடித்துக் கொண்டார்கள்.

Related posts