புகைப்பிடிப்பதில் இருந்து விடுபடுவது எப்படி?

cigar

இந்தியாவில் புகைப்பழக்கத்திற்கு அடிமையான 10 லட்சம் பேர் ஆண்டுதோறும் மரணத்தை தழுவுவதாக இந்திய அரசு கூறுகிறது.

2016-17ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச வயது வந்தோர் புகையிலை ஆய்வின்படி (Global Adult Tobacco Survey), இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 10 கோடிக்கும் அதிகம்.

கவலை தரும் இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சிகரெட் பாக்கெட்டுகளில் 1800-11-2356 என்ற தொலைபேசி உதவி எண்ணை எழுதுவதை இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இந்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தல்கள் படி – இதை இன்றே விட்டுவிலக 1800-11-2356 என்ற எண்ணை அழையுங்கள் – என சிகரெட் அட்டைப்பெட்டியில் அச்சிடவேண்டும்.

புதிய சிகரெட் அட்டைப்பெட்டியில் இடம்பெற வேண்டிய புகைப்படங்களும் எச்சரிக்கைகளும் மாற்றப்பட வேண்டும். தொலைபேசி உதவி எண்ணுடன், ‘புகையிலை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும்’ அல்லது ‘புகையிலிருந்து கிடைப்பது வலிமிகுந்த மரணம்’ என்ற வாசகங்கள் சிகரெட் அட்டைப்பெட்டியில் எழுதப்பட வேண்டும்.

புகைப்பிடிக்கும் பழத்தை கைவிடுவது எப்படி?

அரசின் புதிய உத்தரவின்படி, உதவி எண்களை சிகரெட் அட்டையில் வெளியிடுவதால் மட்டுமே புகைப்பிடிப்பவர்கள் அதிலிருந்து விடுபடுவார்களா? இது எந்த அளவு பயனளிக்கும் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்காக, புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீட்கும் தேசிய மையத்தை (National Tobacco Addiction Services Center) நான் தொடர்பு கொண்டேன்.

Related posts

Leave a Comment