தமிழகத்தில் தி.மு.க., பெரும்பான்மை பெறும்: பரபரப்பு கருத்து கணிப்பு

5 மாநில சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வரும் 2-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
இதில் ரிபப்ளிக் சி.என்.எக்ஸ், ,இந்தியா டுடே, ஏபிபி, சி வோட்டர் வரை பல நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. இதில் தி.மு.க, கூட்டணி பெரும்பான்மை பெறும் என தெரிகிறது.
இதில் தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைப்பர் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இன்று வெளியாகியுள்ள கருத்து கணிப்புகளில், தமிழகத்தில் பெரும்பாலான கணிப்புகள் தி.மு.க., கூட்டணி பெரும்பான்மை பெறும் என தெரியவந்துள்ளது.

அ.தி.மு.க., கூட்டணி 56 முதல் 58 இடங்களிலும், தி.மு.க, கூட்டணி 160- 170 இடங்களிலும், மற்றவை 6 தொகுதிகளிலும் வெற்றி வெறும் என ரிபப்ளிக் டி.வி. சி.என்.எக்ஸ் வெளியிட்டுள்ளது.

அ.தி.மு.க., கூட்டணி 58 முதல் 68 இடங்களிலும்,, தி.மு.க, கூட்டணி 165- 190 இடங்களிலும், மற்றவை 12 தொகுதிகளிலும் வெற்றி வெறும் என பி-மார்க் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

அ.தி.மு.க, கூட்டணி 46- 68 இடங்களிலும், தி.மு.க., கூட்டணி 164-182 இடங்களிலும் மற்றவை4 இடங்களிலும் வெற்றி பெறும் என டுடேய்ஸ் சாணக்கியா கணித்துள்ளது.

தி.மு.க., கூட்டணி 165 முதல் 190 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 40 முதல் 65 இடங்களிலும், மற்றவை 13 இடங்களிலும் வெற்றி பெறும் என இந்தியா அஹெ ட் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.

தி.மு.க, கூட்டணி 160 முதல் 172 தொகுதிகளிலும், அ.தி.மு.க, கூட்டணி 58 முதல் 70 தொகுதிகளிலும், மற்றவை 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் ‘சி’ ஓட்டர்ஸ் கணித்துள்ளது.

மேலும் சில நிறுவனங்களின் கருத்து கணிப்புகள் வாயிலாக தி.மு.க, பெரும்பான்மை பெற வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.

Related posts