இலங்கையில் எஸ்.ஜெயபாலசிங்கம் ரியூப் தமிழ் இணைந்து ஐரா

இலங்கையில் திரைத்துறையில் மறுபடியும் காலடி பதித்துள்ளார் முன்னாள் திரைப்பட விநியோகஸ்தரான வல்வை எஸ்.ஜெயபாலசிங்கம். இவருடன் கைகோர்த்துள்ளது ரியூப்தமிழ் எப் எம் யாழ்ப்பாண கலையகம்.

யாழ். குடாநாட்டின் வெளியீட்டு முயற்சிகளை முன்னெடுக்கிறது ரியூப் தமிழ், இதற்காக யாழ்ப்பாணத்தில் பரவலான பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன.

மாதம் ஒரு புதிய திரைப்படங்கள் என்ற அடிப்படையில் கொள்வனவு ஆரம்பமாகியிருக்கிறது என்று எஸ்.ஜெயபாலசிங்கம் தெரிவிக்கிறார்.

இதுவரை 25 திரையரங்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

யாழ். ராஜா திரையரங்கு உட்பட யாழ். குடாநாட்டின் அனைத்து திரையரங்குகளிலும் ரியூப்தமிழ் ஆரம்பித்து வைக்கிறது திரைப்படத்தை.

ரியூப் தமிழின் சொந்தத் திரைப்படம் வரும் கோடை காலத்தில் யாழில் கோலாகலமாக படப்பிடிப்பு ஆரம்பிக்க இருப்பதாக தெரிகிறது.

உலகத் தமிழினம் ஒன்றிணைகிறது அத்துடன் தமிழகமும் கைகோர்க்கிறது.

அலைகள் 27.03.2019

Related posts