தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற பாடுபடுவோம்

மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற பாடுபடுவோம் என அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலி தாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு நாகை மாவட்ட ஜெ. பேரவை சார்பில், தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலும், மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் சட்டப் பேரவை இடைத்தேர்தல் ஆகியவற் றில் அதிமுக வெற்றி பெறுவது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

ஜெ. பேரவைச் செயலாளரும், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். அதிமுக மாவட்டச் செயலாளரும், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஓ.எஸ்.மணியன், எம்.பி கோபால், எம்எல்ஏக்கள் பாரதி, பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், நெகிழிப் பொருட்களுக்கு தடை விதித்த அரசுக்கு நன்றி தெரிவிப்பது, மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வெற்றிக் கூட்டணி வெற்றி பெற பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related posts