2.0 இதுவரை 500 கோடி வசூல் லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்தின் 2.0 கடந்த வாரம் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது. அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் ஆகியோரும் நடித்துள்ளனர். ரூ.600 கோடி செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் எந்த படமும் இவ்வளவு அதிக செலவில் தயாரானது இல்லை. உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிட்டனர்.

பாகுபலி, சர்க்கார் போன்ற முந்தைய படங்களின் சாதனையை முதல் வாரத்திலேயே ரஜினியின் படம் முறியடித்து விட்டது.

படம் வெளியான 4 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்ததாக பட நிறுவனமான லைகா அறிவித்தது. தற்போது வசூல் ரூ.500 கோடியை தாண்டி இருப்பதாக கூறப்படுகிறது. அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்து இருந்ததால் இந்தியிலும் 2.0 வெளியாகி வட மாநிலங்களில் வரவேற்பை பெற்றது.

சீனாவிலும் 2.0 படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர். இதற்காக அங்குள்ள முன்னணி தயாரிப்பு நிறுவனமான எச்.ஒய். மீடியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். 2.0 படத்தை சீன மொழியில் டப் செய்து வெளியிடுகின்றனர். அடுத்த ஆண்டு மே மாதம் 10 ஆயிரம் சீன திரையரங்குகளில் 56 ஆயிரம் காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இதனால் இதன் வசூல் இன்னும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 2.0 உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலை செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனமான லைகா கூறி உள்ளது.

Related posts