ஜெயலலிதாவை விஷம் வைத்து கொன்ற கும்பல்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, ‘‘ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்த துரோகிகளால் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மெதுவாக கொல்லும் விஷம் கொடுத்து ஜெயலலிதாவை ஒரு கும்பல் கொன்றுவிட்டது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு வேண்டாத உணவு கொடுத்திருக்கிறார்கள்.

இதுவரை நிலக்கோட்டை தொகுதிக்கு ரூ.73 கோடி செலவில் நலத்திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

அப்போது ஆவரம்பட்டி அதிமுக கிளைச்செயலாளர் நாகத்தேவர், ‘‘எங்கள் கிராமத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக எந்த திட்டமும் செய்யவில்லை’’ என மேடை முன்பு சென்று, அமைச்சரை பார்த்து கை நீட்டி கேள்வி கேட்டார்.

இதனால், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும், நாகத்தேவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Related posts