ஈரானுக்கும் சீனாவுக்கும் விழும் அடி இலங்கையின் வயிற்றிலடிக்கும்

இன்றைய சர்வதேச போட்டி பொருளாதார நடவடிக்கைகள் இறுதியாக இலங்கையின் வயிற்றில் ஓங்கி குத்த வாய்ப்புள்ளது.

கடந்த காலங்களில் இலங்கை தொடர்பு வைத்திருந்த நாடுகள் சர்வதேச சிக்கல்களில் மாட்டுப்படும் நாடுகள் என்பதை இலங்கை மதிப்பிட்டதாக தெரியவில்லை.

இனப்போரை முடித்தால் போதும் என்று பல பேய்களுடன் கூட்டு வைத்தது. இப்போது பேய்கள் சிக்கலில் மாட்டும் காலமாக இருப்பதால் பேயோடு சேர்ந்த பிசாசும் அடிபடுவதைப் போன்ற நிலையொன்று உருவாகிவருகிறது.

ஈரான், சீனா, ரஸ்யா, துருக்கி, சிரியா, வடகொரியா போன்ற நாடுகளுடன் தொடர்பு வைத்திருந்த நாடுகள் எல்லாம் சிக்கலில் மாட்டுண்டு போகும் நிலை இருக்கிறது.

அந்த வகையில் ஈரானும் சீனாவும் பொருளாதார நெருக்கடியில் சிக்க சிக்க இலங்கைக்கும் அடி விழ ஆரம்பிக்கும்.

நாணயம் பெறுமதி விழும். அங்கு வங்கியில் கோடிக்கணக்கில் வைப்பிட்ட புலம் பெயர் தமிழர்களின் பணம் பெறுமதி இழக்க வாய்ப்புண்டு.

இது குறித்து வந்துள்ள செய்தி :

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகள் எதிர்வரும் நவம்பர் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வருகின்ற நிலையில் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு நெருக்கடி நிலை ஏற்படலாம் என எச்சரித்துள்ள விஷேட பொருளாதார நிபுணர்கள் குழு , சீனாவுடனான அமெரிக்காவின் பொருளாதார போட்டி தன்மையினால் இலங்கைக்கான சீன உதவி திட்டங்களிலும் வீழ்ச்சி ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் எதிர்வரும் நாட்களில் ஏற்படக் கூடிய பொருளாதார தாக்கங்களை கருத்தில் கொண்டு நாட்டின் முக்கிய பொருளாதார நிலைகளை வலுப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனைத்து தரப்புகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று திங்கட்கிழமை பொருளாதார குழு சந்தித்தப்போதே மேற்கண்டவாறு ஆலோசனை வழங்க்கட்டது.

இதனடிப்படையில் நிதி அமைச்சு , அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு ,கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து மத்திய வங்கி ஊடாக பொருளாதார உபாய முறைகள் தயாரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts