சபாஷ் நாயுடு’ படத்தை மீண்டும் தொடங்கும் கமல் !

6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ள சபாஷ் நாயுடு படத்தையும் மீண்டும் தொடங்க முடிவு செய்து இருக்கிறார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் 4 வருடங்களுக்கு பிறகு நடித்து திரைக்கு வந்துள்ள விக்ரம் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் சாதனையும் நிகழ்த்தி வருகிறது.
இத்தனை வருடங்களுக்கு பிறகும் தனது படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது கமல்ஹாசனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார்.
மலையாள டைரக்டர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதை ஏற்கனவே உறுதி செய்துள்ளார். இந்தியன் 2 படத்திலும் நடிக்க இருக்கிறார்.
விக்ரம் படத்தின் 3-ம் பாகத்தில் நடிக்கவும் திட்டம் உள்ளது. இந்த நிலையில் 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ள சபாஷ் நாயுடு படத்தையும் மீண்டும் தொடங்க முடிவு செய்து இருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு 2016-ல் அமெரிக்காவில் தொடங்கியது. பின்னர் படத்தின் இயக்குனர் ராஜீவ்குமார் விலகியதால் கமல்ஹாசனே இயக்கினார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் படம் நின்று போனது. தற்போது சபாஷ்நாயுடு படத்தை மீண்டும் தொடங்கும் திட்டம் இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
இது கமல்ஹாசன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts