இராஜினாமா கடிதத்தை கையளித்த பசில் ராஜபக்ஷ

பசில் ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் இன்று (09) கையளித்துள்ளார்.

அவர் 2021 ஆம் ஆண்டு ஜூலை 08 ஆம் திகதி ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் பல மாதங்கள் நிதி அமைச்சராக பதவி வகித்தார்.

பசில் ராஜபக்ஷ இதற்கு முன்னர் இரண்டு முறை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts