நோர்வேயில் மர்ம நபரால் அம்பெய்து ஐவர் படுகொலை

நோர்வே நாட்டில், மர்மநபர் ஒருவர் அம்பு, வில்லை பயன்படுத்தி பொதுமக்கள் மீது எய்து 5 பேரை கொன்றுள்ளதோடு, துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளார்.
இதில் 2 பொலிஸார் உள்ளிட்ட பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து அந்த நபர் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் கொங்ஸ்பேர்க் (Kongsberg) நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இரவு நேரத்தில் மர்ம மனிதர் ஒருவரால் இப்பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள தலைநகரின் மையப்பகுதி இரவு நேரத்தில் பொதுமக்கள் பரபரப்பாக இருந்த இருந்த வேளையில், கையில், விம், அம்புடன் வந்த அந்த நபர், மக்களை அம்புகள் எய்தி கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சராமரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளார்.
சுற்றி என்ன நடப்பது என்று தெரிவதற்கு முன்பே தாக்குதலுக்குள்ளான மக்கள் சுருண்டு வீழ்ந்துள்ளனர். பலர் அங்கிருந்து தங்கள் உயிரை கையில் பிடித்தவாறு தப்பி ஓடியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த பொலிசார் குறித்த நபரை சுற்றி வளைத்து பிடிக்க முயற்சித்த வேளையில் பொலிசார் மீதும் அவர் தாக்குதல் நடாத்தியுள்ளார்.
இறுதியில் குறித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்திய நபரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் 37 வயதான டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடாத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியப்படுத்தபடவில்லை.
அரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த தாக்குதலை பொதுமக்கள் மீது அந்த நபர் நடத்தியுள்ளதாக கூறப்படுவதோடு, அந்நபரின் கை நிறைய அம்புகள் இருந்ததாக அதனை அவதானித்த ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts