5 வயது சிறுமியில் வாயில் சூடு; தாய்க்கு விளக்கமறியல்

அப்பளத்தை சாப்பிட்டதால் 5 வயது சிறுமிக்கு வாயில் சூடு வைத்த தாயை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கிளிநொச்சி? அக்கரையான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்கந்தபுரம் விநாயகர் குடியிருப்பு பகுதியில் கடந்த 08ம் திகதி ஐந்து வயதுடைய தனது பிள்ளைக்கு நெருப்பால் சுட்டதாய் தொடர்பில் பொலிசாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

குறித்த சிறுமி தாயாருக்கு தெரியாமல் அப்பளத்தை சாப்பிட்ட காரணத்தினால் தாயார் பெற்ற குழந்தைக்கு வாய் பகுதியில் நெருப்பால் சுட்டுள்ளார்.

சிறுமியின் வாயில் சூட்டு காயத்தை அவதானித்த நபர் ஒருவர் அக்கரையான் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த தகவலிற்கமைய தாயார் பொலிசாரால் கைது செய்யப்பட்டதோடு, சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தந்தை தொழிலுக்குச் சென்ற சமையம் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

நேற்று (09) குறித்த பெண்ணை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவரை 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

Related posts