கவுதம் மேனன்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் புதிய பாடல்

கவுதம் மேனன்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் புதிய பாடல் ஒன்று உருவாகியுள்ளது.

தெலங்கானாவில் ‘பதுகம்மா’ என்று அழைக்கப்படும் ஒரு மலர்த் திருவிழாவை கொண்டாடுகின்றனர். இது ஆந்திரத்தில், விசாகப்பட்டிணம் போன்ற சில நகரங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது தெலங்கானாவின் கலாச்சார உணர்வைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் பதுகம்மா திருவிழாவையொட்டி கவுதம் மேனன்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் பாடல் ஒன்று உருவாகியுள்ளது. ‘பதுகம்மா’ கலாச்சார திருவிழாவின் சிறப்புகளை பிரதிபலிக்கும் விதமாக இந்த பாடல் அமைந்துள்ளது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts