வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தப்பட்டது

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களில் 48 பேருக்கு ​கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டது.

இதனையடுத்து பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியினால் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிபாளருக்கும் நேற்றிரவு (15) முன்வைக்கப்பட்ட கோரிக்கை அமைய குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை வடமேற்கு (ஜே 388) கிராம அலுவலகர் பிரிவே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் கிராமத்தில் 310 குடும்பங்களைச் சேர்ந்த 940 பேர் வசிக்கின்றனர்.

இதேவேளை, பருத்தித்துறை முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் குறுக்குத் தெருக்களிலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

—–

வடக்கு கிழக்கிற்கு விசேட கொவிட் தடுப்பூசி திட்டம்

வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை விரைவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி இவ்விசேட திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Related posts