மேற்கு வங்கத்திற்கு பயணிக்கவுள்ளார் ரஜினி.

‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்புக்காக மேற்கு வங்கத்திற்கு பயணிக்கவுள்ளார் ரஜினி.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்காக சில முக்கிய காட்சிகளைப் படமாக்க வேண்டியதுள்ளது.
மெரிக்காவிலிருந்து ரஜினி திரும்பியவுடன், இதன் படப்பிடிப்பு இருக்கும் எனத் தகவல் வெளியானது. தற்போது இந்தக் காட்சிகளின் படப்பிடிப்பு மேற்கு வங்கத்தில் படமாக்கவுள்ளது படக்குழு. இதற்காக நாளை (ஜூலை 14) மேற்கு வங்கத்துக்கு பயணிக்கவுள்ளார் ரஜினி.
மேற்கு வங்க படப்பிடிப்பில் ரஜினியின் காட்சிகளை 4 நாட்கள் படமாக்கவுள்ளது படக்குழு. அத்துடன் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே முடிந்துவிடும். அன்றைய தினத்தில் ரஜினிக்கு பிரம்மாண்ட மரியாதை செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
மேற்கு வங்க படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு. அனைத்து பணிகளையும் முடித்து தீபாவளிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts