‘கே 13’ இயக்குநர் படத்தில் டாப்ஸி

பரத் நீலகண்டன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் டாப்ஸி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கே 13’. பரத் நீலகண்டன் இயக்குநராக அறிமுகமான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் பரத் நீலகண்டன்.
கரோனா அச்சுறுத்தலால் இதன் பணிகள் பாதிக்கப்பட்டன. தற்போது, பரத் நீலகண்டனின் அடுத்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் பிரதான கதாபாத்திரத்தில் டாப்ஸி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அறிவியல் புனைவுக் கதையாகப் பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாராகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் மற்றொரு படத்தில் டாப்ஸி நடித்து முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts