7 பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை

தமிழர்கள் என்ற அடிப்படையில் 7 பேரை விடுதலை செய்வதில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை’ என, தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். தங்களை விடுவிக்கக் கோரி ஏழு பேரும் அளித்த கோரிக்கைகள் மீது முடிவெடுப்பதில் ஏற்கெனவே கூடுதலான தாமதம் ஏற்பட்டுள்ளது.’தமிழக அரசு கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி அளித்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு, ஏழு பேருக்கான தண்டனையில் விலக்களித்து உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும்’ என, ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையிலில் கே.எஸ்.அழகிரி இன்று (மே 21) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கவில்லை. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் எங்களுக்கு ஒப்புதல் இல்லை. அவர்களுடைய கருத்தை அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுடைய தேர்தல் அறிக்கையிலேயே 7 பேர் விடுதலை பற்றி சொல்லியிருக்கிறார்கள். எங்கள் தேர்தல் அறிக்கையில் நாங்கள் வலியுறுத்தவில்லை. எனவே எங்கள் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழர்கள் என்ற அடிப்படையில் 7 பேரை விடுதலை செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

Related posts