திமுக – காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் மோடி

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பொய் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவாகவும், சிறப்பாகவும் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி மதுரை பிரசார கூட்டத்தில் பேசினார்.
மதுரையில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பிரசார கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
பிரசார கூட்டத்தில் பேசிய துணை முதல்-அமைச்சர் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகிற தேர்தல் என கூறினார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது

கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காப்பாற்றுபவர் பிரதமர் மோடி. நாட்டு மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட தலைவர் பிரதமர் மோடி உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை பறைசாற்றியவர் பிரதமர் மோடி. உலகமே வியக்கும் அளவுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கிய பெருமை பிரதமர் மோடியையே சாரும். ஒரே ஆண்டி கொரோனா தடுப்பூசியை கொண்டுவந்தவர் மோடி என கூறினார்.

வெற்றிவேல் வீர வேல் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா? என தமிழில் பொதுமக்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி தொடர்ந்து பேசி அவர் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த மதுரை வீரன் படத்தை யாராலும் மறக்க முடியாது. உலகத்தின் தொன்மை மொழியான தமிழை, சங்கம் வைத்து வளர்த்தது மதுரை . மறைந்த தென் மாவட்ட தலைவர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றும் இடமாக மதுரை திகழ்கிறது.

அனைத்து கிராமங்களுக்கும் இணையதள சேவை கொண்டு வர மத்திய அரசு திட்டம்.இந்த நிலம் சுந்தரேஸ்வர் கடவுலின் நிலம் . நீர் எவ்வளவு முக்கியமானது என்பதைச் சொல்லும் பல திரைப்படங்கள் உள்ளன. 2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்க திட்டம்.இந்த் தொடங்கப்பட்டதிலிருந்து 60 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

தமிழகத்தில் சுமார் 16 லட்சம் வீடுகளுக்கு குழாய்மூலம் வீடுகளுக்கு நேரடியாக தண்ணீர் வ்ழங்கும் திட்டம் நிறைவேறி உள்ளது.

தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன தமிழகத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது. சாலை போக்குவரத்து, ரெயில்வே கட்டுமானம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பிராந்திய மக்கள் வலுவான மனமும் பெரிய இதயமும் கொண்டவர்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு எனது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள சவுராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்தார்கள். மதுரை அவர்களை ஏற்றுக்கொண்ட விதம் ஒரே பாரதம் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

2016 தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க அழைப்பு விடுத்தது. காங்கிரஸ்- திமுக தங்களைப் பற்றி வெட்கப்பட வேண்டும். மக்கள் ஒரு தீர்வை நாடினர் ஜல்லிகாட்டு தொடர விரும்பினர்.இதை தொடர்ந்து மத்திய அரசு அதிமுகவின் கோரிக்கையை ஏற்றுய் ஜல்லிகட்டுக்கு அனுமதி அளித்தது.திமுக மற்றும் காங்கிரஸ் பாதுகாப்பு அல்லது கண்ணியத்திற்கு உத்தரவாதம் அளிக்காது. திமுகவின் முதல் குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் திமுக மதுரையை மாபியாவாக மாற்ற முயன்றது. அவர்கள் மதுரையின் நெறிமுறைகளைப் புரிந்து கொள்ளவில்லை, ஆச்சரியப்படுவதற்கில்லை, திமுக தலைவர்கள் பெண்களை மீண்டும் மீண்டும் அவமதித்து வருகிறார்கள்.

மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்தது.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவாகவும், சிறப்பாகவும் உருவாக்கப்படும். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பொய் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார்.

Related posts