அண்ணாத்த’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஜெகபதிபாபு?

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த பட வேலைகள் சென்னையில் மீண்டும் தொடங்கி உள்ளன. படப்பிடிப்பில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடிக்கவும், படக்குழுவினர் வெளியாட்களை சந்திக்கவும் தடை விதித்துள்ளனர்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த பட வேலைகள் சென்னையில் மீண்டும் தொடங்கி உள்ளன. படப்பிடிப்பில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடிக்கவும், படக்குழுவினர் வெளியாட்களை சந்திக்கவும் தடை விதித்துள்ளனர். ரஜினிகாந்த் 30 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. சில காட்சிகளை ஐதராபாத் திரைப்பட நகரில் படமாக்க ஏற்கனவே திட்டமிட்டு இருந்தனர். ரஜினி பாதுகாப்பை கருதி அனைத்து காட்சிகளையும் சென்னையிலேயே படமாக்க உள்ளனர். தற்போது கொரோனா மீண்டும் அதிகமாக பரவி வருவதால் அண்ணாத்த படப்பிடிப்பை மறுபடியும் தள்ளி வைக்கலாமா என்று படக்குழுவினர் யோசிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 பேர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோரும் உள்ளனர். தற்போது ஜெகபதி பாபுவையும் புதிதாக அண்ணாத்த படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். அவர் ரஜினிக்கு வில்லனாக நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே ரஜினியின் லிங்கா படத்திலும் ஜெகபதி பாபு வில்லனாக நடித்து இருந்தார்.

Related posts