சட்ட நடவடிக்கை எடுங்கள் நீதிமன்றில் சந்திப்போம்

அமைச்சர் சரத் வீரசேகர என்மீது சட்ட நடவடிக்கையை கட்டாயமாக எடுக்கட்டும். அது குறித்து நீதிமன்றத்தில் சந்திப்போமென, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடக சந்திப்பில், ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சரத் வீரசேகர சட்ட நடவடிக்கை எடுத்தால் தான் அதை வரவேற்பதாகவும், இதன்மூலம் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவரக்கூடிய ஒரு சந்தர்ப்பம் தங்களுக்கு ஏற்படுமென்றும் அவர் கூறியுள்ளார். ஏன்னென்றால், தான் இதுவரையில் எடுத்திருக்கும் அத்தனை நடவடிக்கைகளும் ஜனநாயகத்திற்கு உட்பட்டவையே எனவும், வெறுமனே அவர்கள் நினைத்ததுபோன்று தங்களைக் குற்றம்சாட்ட முடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சட்ட நடவடிக்கையை கட்டாயமாக எடுக்கட்டும் நீதிமன்றத்திலே அவற்றைச் சந்திப்போமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts