நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் மீண்டும் கைது

மருத்துவ படிப்பில் சேர சீட்டு வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

டிவி நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு கணவர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மருத்துவ படிப்பிற்கு சீட் வாங்கிக் கொடுப்பதாக கூறி ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக ஹேம்நாத் மீது ஜெஜெ நகர் போலீஸ் நிலையத்தில் 2015 ஆம் ஆண்டு பண மோசடி, கொலை மிரட்டல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

பின்னர் வழக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த பண மோசடி வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் ஹேம்நாத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மறுபடியும் கைது செய்து காவலில் எடுத்து தற்போது விசாரித்து வருகின்றனர்.

Related posts