விமானத்தில் சீனா சென்ற இந்தியர்களுக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா இல்லை என சான்றிதழுடன் வந்தே பாரத் விமானத்தில் சீனா சென்ற 19க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கொரோனா தொற்று

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் ஹூபே மாகாணத்தின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவமாடி வருகிறது.

கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுடன் விமான போக்குவரத்திற்கு சீனா சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதையடுத்து, சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கவும், இந்தியாவில் உள்ளவர்கள் சீனாவுக்கு கொண்டு செல்லவும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏர் இந்தியா விமானம் உகான் நகரத்திற்கு பயணம் மேற்கொண்டது. இந்த விமானத்தில் 277 பயணிகள் பயணம் மேற்கொண்ட நிலையில் அதில் 19 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 39 பேர் கொரோனா அறிகுறிகளுடன் உள்ளனர்.

இதுகுறித்து விளக்கமளித்த ஏர்-இந்தியா, டெல்லியில் இருந்து அனுப்பி வைக்கும் போது, அவர்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் பெறப்பட்டதாக தெரிவித்துள்ளது.

Related posts