ரஜினி அரசியலுக்கு வருவாரா? குஷ்பு, கஸ்தூரி கருத்து

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் உடல்நிலை காரணமாக தடைபடும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

அரசியலுக்கு வரவேண்டாம் என்று மருத்துவர்கள் அவருக்கு ஆலோசனை தெரிவித்து இருக்கிறார்கள். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை விரைவில் சந்தித்து பேசி தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன் என்று ரஜினி கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் அரசியலுக்கு வருவார் என்றும், வரமாட்டார் என்றும் சமூக வலைத்தளத்தில் விவாதங்கள் நடக்கின்றன.

நடிகை குஷ்பு டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ரஜினிகாந்த் அவர்களே, உங்கள் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் விட வேறு எதுவும் முக்கியம் இல்லை. நீங்கள் விலைமதிப்பில்லா ரத்தினம். நீங்கள் எங்களுடைய புதையல். ஆரோக்கியத்தை மனதில் வைத்து உங்களுக்கு சிறந்தது எதுவோ அதை செய்யுங்கள். ஆனாலும் உங்கள் மீது நாங்கள் வைத்துள்ள அன்பு மாறாது” என்று கூறியுள்ளார்.

நடிகை கஸ்தூரியிடம் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் டெல்லி தேர்தல் நீங்கள் கணித்த மாதிரியே நடந்துள்ளது. தயவு செய்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? கூறுங்கள் என்று கேள்வி எழுப்ப, அதற்கு பதில் அளித்து கஸ்தூரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ரஜினி பற்றி கமல் ஸ்டைலில் சொல்கிறேன். வருவாருன்னு நினைக்கல. வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Related posts