இன்றைய இலங்கை செய்திகள் 26.05.2020

இலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த அனைவரும் குவைத்திலிருந்து நாட்டுக்கு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1278 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இன்றைய தினம் இதுவரை 96 கொரோனா நோயாளிகள் நாட்டில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 712 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 556 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. —– இலங்கையில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த 10 பேரும் குவைத்தில் இருந்து இலங்கைக்கு வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி நாட்டில்…