தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 22 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 822 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

——

தகவல்களின்படி, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மேற்கு கடற்கரை அல்லது மேல் கடல்களில் மதிப்புமிக்க இந்திய சொத்துக்களை குறிவைக்கலாம். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அரேபிய கடலில் ஒரு சிறிய துறைமுகப் பகுதியில் சமீபத்தில் முயற்சி செய்த பாகிஸ்தான் நிழல் உலகம் அல்லது சிறிய கடத்தல் குழுக்களை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது.

இந்த பகுதி, இந்தியாவின் கடற்கரைக்கு அருகிலேயே இருப்பது தவிர, விருப்பமான கடல் கடத்தல் பாதையின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் ஏஜென்சிகள் இந்த துறைமுகங்களில் தங்கள் அமைப்புகளை நிறுவுவதில் அவர்களின் உதவியை நாடுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு போர் பயிற்சியையும் அளிக்கின்றன.

ஏப்ரல் 12 ம் தேதி, பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் இந்திய மீன்பிடி படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது, அதில் ஒரு இந்திய மீனவர் காயமடைந்தார். அண்மையில், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த படகுகளில் இருந்து இந்திய கடற்கரை, இலங்கை மற்றும் மாலத்தீவை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகள் பல உள்ளன. உளவுத்துறை வட்டார தவல்களின்படி, இந்த அவர்களுடன் ஓரளவு வெடிமருந்துகளையும் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கிறது.

உலகம் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகையில், பாகிஸ்தான் தனது கொள்கையை மாற்றவில்லை, தொடர்ந்து இந்தியா மீதான தாக்குதல்களைத் திட்டமிட்டுவருகிறது. ஜம்மு-காஷ்மீரில் எல்லைகட்டுப்பாட்டுக் கோடு வழியாக பாகிஸ்தான் தொடர்ந்து போர்நிறுத்தத்தை மீறி வருகிறது. இது இந்தியாவிற்குள் பயங்கரவாதிகளையும் அனுப்புகிறது.

Related posts