ரொம்ப பயங்கரமா இருக்கு வெளியே வராதிங்க வடிவேலு

இந்தியாவையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த நாடெங்கும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவையை தவிர மற்ற நேரங்களில் மக்கள் வீட்டை வௌபியே வரவேண்டாம். ஊரடங்கை கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் சிலர் இதை மீறி செயல்படுகின்றனர். அரசு, அதிகாரிகள், திரைப்பிரபலங்கள் பலரும் இதுப்பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மக்களை இப்போதும் சிரிக்க வைத்து கொண்டிருக்கும் நடிகர் வடிவேலு கண்கலங்கி ஒரு வீடியோ வெளபியிட்டு

மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, மன வேதனை உடனும், துக்கத்துடனும்

சொல்கிறேன். அரசு சொல்லும் அறிவுரை படி கொஞ்ச நாளைக்கு வீட்டுக்கு உள்ளேயே இருங்க, மருத்துவ உலகம் மிரண்டு போய் உள்ளது. அவர்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்ற போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

வெள ய வராதீங்க என்று போலீசார் கெஞ்சி கும்புடுகிறார்கள். யாருக்காக இல்லாவிட்டால், நம்ம சந்ததியினருக்காக, நம்ம புள்ள, குட்டிகளின் உயிரை காப்பாற்ற நாம் எல்லோரும் வீட்டில் இருக்கும் என கேட்டுக் கொள்கிறேன். இதை அசால்ட்டா அடிக்காதிங்க ரொம்ப பயங்கரமா இருக்கு. தயவு பண்ணி வெளியே வராதிங்க என கண்கலங்கி வீடியோவில் பேசியுள்ளார் நடிகர்

Related posts