டென்மார்க் கேர்னிங் நகரில் இப்போது எரிகிறது தொழிற்சாலை

இன்று 09.03.2020 திங்கள் மதியம் டென்மார்க் கேர்னிங் நகரில் உள்ள பெக்கஸ்கெயா வை என்ற இடத்தில் அமைந்துள்ள மறியுஸ் பீட்டர்சன் ஏ.எஸ் என்ற தொழிற்சாலை தீப்பற்றி எரிகிறது.

தீ மிகவும் மோசமாக இருப்பதால் அப்பகுதி வாழ் மக்கள் சன்னல், கதவுகளை பூட்டியபடி வீட்டிற்குள் இருக்கும்படியும் வெளியால் போக வேண்டாம் என்றும் கேட்கப்பட்டுள்ளது. புகையின் தாக்கம் காரணமாக அருகில் உள்ள பாதை தடுக்கப்பட்டுள்ளது.

அபாய சங்கு ஒலித்தது பல தடவைகள்.. தீ கட்டுப்பாட்டில் வரும்வரை கவனமெடுக்கவும். உள்ளுர் செய்தியை பார்க்கவும்.

அலைகள் 09.03.2020

Related posts