உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நயன்தாரா தொடங்கி வைத்தார்..!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில்பெண்கள் பாதுகாப்பு பேரணியை நடிகை நயன்தாரா தொடங்கி வைத்தார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் வருமான வரித்துறை சார்பில், பெண்கள் பாதுகாப்பு பேரணி நடைபெற்றது.

எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக நடிகை நயன்தாரா கலந்து கொண்டு, பெண்கள் பாதுகாப்பு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

——–

விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் ஒரு பேராசிரியராக நடித்திருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் மூலம் முதன் முறையாக விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுடன் சாந்தனு, ஆன்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்த நிலையில் படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்பின் இறுதிநாளில் நெய்வேலியில் நடிகர் விஜய், மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் மரம் நட்டு வைத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

முதல்முறையாக கல்லூரி பேராசியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய், மாணவர்களும், தனது ரசிகர்களும் பின்பற்றும் வகையில் அங்கு மரம் நட்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

—–

ஆண்ட்ரியாவும், பிரியா ஆனந்தும் உறவினர்களா? இரண்டு பேரும் ஒரே ஜாடையில் தெரிகிறார்களே…?

ஆண்ட்ரியா பாதி ஆங்கிலேயர், பாதி இந்தியர். பிரியா ஆனந்த், அசல் தமிழ் பெண். இவருடைய பூர்வீகம், மயிலாடுதுறை! இருவருக்கும் எந்த உறவுமுறையும் இல்லை.

———

ஏவி.எம். தயாரித்த படங்களில், மிக அதிக நாட்கள் ஓடிய படம் எது? அதிக வசூல் செய்த படம் எது?

ஏவி.எம் தயாரித்து அதிக நாட்கள் ஓடிய படம், ‘முந்தானை முடிச்சு.’ அதிக வசூல் செய்த படம், ‘சிவாஜி!’

—-

Related posts