உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நயன்தாரா தொடங்கி வைத்தார்..!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில்பெண்கள் பாதுகாப்பு பேரணியை நடிகை நயன்தாரா தொடங்கி வைத்தார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் வருமான வரித்துறை சார்பில், பெண்கள் பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக நடிகை நயன்தாரா கலந்து கொண்டு, பெண்கள் பாதுகாப்பு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ——– விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் ஒரு பேராசிரியராக நடித்திருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் மூலம் முதன் முறையாக விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுடன் சாந்தனு, ஆன்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.…