திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மஹிந்த ஸ்வாமி தரிசனம்

இந்தியா வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மோடியை சந்தித்த பிறகு நாட்டின் பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார்.

அவர் தனது பயணத்தின் இறுதியாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை ரேணிகுண்டா விமான நிலையம் வந்தார்.

விமான நிலையத்தில் அதிகாரிகள் வரவேற்பிற்கு பிறகு திருமலைக்கு சென்ற மஹிந்த ராஜபக்ஷ திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.

இன்று காலை நடைபெற்ற அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் நுழைவாயிலில் தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், அர்ச்சகர்கள் இஸ்தி கப்பால் மரியாதையுடன் மஹிந்த ராஜபக்ஷவை கோவிலுக்குள் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்து வைத்தனர்.

சுவாமி தரிசனத்திற்கு பிறகு தங்க நாணயங்களை காணிக்கையாக செலுத்திய மஹிந்த ராஜபக்ஷ பின்னர் தங்க கொடி மரத்தை தொட்டு வணங்கி தரிசனம் செய்தார். இதையடுத்து ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் செய்து வைக்க தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

Related posts