இலங்கையருக்கு பிரித்தானியாவில் 7 வருட சிறைத்தண்டனை

அமெரிக்க நிறுவனம் ஒன்றின் மின்னஞ்சல் ஊடாக பல மில்லியன் அமெரிக்கா டொலர்களை மோசடி செய்த இலங்கையில் பிறந்த பிரித்தானியர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

பிரித்தானியாவின் கர்னார்போன் கிரவுன் நீதிமன்றத்தின் ஊடாக 7 வருடங்களும் 8 மாதங்களும் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

41 வயதான மைக்கல் கினானே என்பவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நிறுவனம் ஒன்றின் மின்னஞ்சல் திட்டம் மூலம் 8 மில்லியன் டொலர் மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவர் மீது, பணச்சலவை உள்ளிட்ட மேலும் சில குற்றங்கள் தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

குறித்த குற்றங்களை குற்றவாளி ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் நேற்று (04) குறித்த நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts