சிவபத அறிவித்தல் : ஸ்ரீ ப .குமாரஸ்வாமி சர்மா அவர்கள்

மாவிட்டபுரம் மாவை ஆதீனத்தை சேர்ந்த ப்ரஹ்ம ஸ்ரீ ப .குமாரஸ்வாமி சர்மா அவர்கள் 31.01 2020 அன்று காலை சிவபதமடைந்தார் .அன்னார் மாவை ஆதீனத்தை சேர்ந்த வேத சிவாகம பிரதிஷ்டா சிரோன்மணி சிவஸ்ரீ கு.பஞ்சநதகுருக்கள் பாலாம்பிகை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும் பொன்னாலை ப்ரஹ்ம ஸ்ரீ வைத்தீஸ்வர சர்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் திருமதி.சந்திரா அவர்களின் அன்புக்கணவரும்,,கோகுல கிருஷ்ண சர்மா. கல்பனா ஆகியோரின் அன்பு தந்தையும் கணேச சர்மா சேகரசர்மா ,பவானி ஆகியோரின் அன்பு சிற்றப்பாவும் ஆவார்
அன்னாரின் பூதவுடல் கொழும்பு ஜயரத்ன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு ஈமக்கிரியைகள் நடைபெற்று கனத்தை மயானத்தில் இன்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது .

எங்களின் அன்பு சிற்றப்பாவே எமது இளமைப் பிராயத்தில் எமக்கு நல்வழிகாட்டியாக சிறந்த நல்ஆசானாகத் திகழ்ந்தீர்கள். உங்களுக்கு எமது குடும்பம் சார்ந்த கண்ணீர் அஞ்சலிகளை உங்களின் புனித பாதங்களின் சமர்ப்பிக்கும் அதே அச்சமயம் உங்கள் ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானையும் மாவைக்கந்தனையும் பிரார்த்திக்கிறோம்..

ஓம் சாந்தி!!!

தகவல்:
ம. கணேச சர்மா
டென்மார்க்.

Related posts