இலங்கை : சீரற்ற காலநிலை 65,316 பேர் பாதிப்பு!

நாட்டில் கடந்த 03 ஆம் திகதி தொடக்கம் இன்று காலை 9.00 வரையான காலப் பகுதியில் தொடரும் சீரற்ற நிலைக் காரணமாக உண்டான அனர்த்தங்களினால் 13 மாவட்டங்களில் 19,072 குடும்பங்களைச் சேர்ந்த 65, 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்தும் ஒருவர் காணாமல்போயும் உள்ளனர்.

அத்துடன் 62 வீடுகள் முற்றாகவும், 1463 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன் 5,277 குடும்பங்களைச் சேர்ந்த 17,776 போர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு, கண்டி, அம்பாறை, நுவரெலியா, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, குருணாகல், புத்தளம், கேகாலை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தோரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts