கால எல்லை நிறைவு – 41 வேட்பாளர்கள் களத்தில்

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று மதியம் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

அதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இவர்களுக்குள் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் ஆகியவர்களும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

Related posts