ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு அதிக கஷ்டம்; சமந்தா

சினிமாவில் ஹீரோக்களைவிட ஹீரோயின்களுக்கு அதிக கஷ்டம் இருக்கிறது என்றார் சமந்தா. அவர் கூறியதாவது: சினிமாவில் நடிப்பு, தொழில் நுட்பம், தயாரிப்பு எதிலும் பெண்கள் சளைத்தவர் கள் இல்லை. இத்துறையில் ஹீரோக்களை விட ஹீரோயின்கள்தான் அதிக கஷ்டப்படுகிறார்கள். பெண் இயக்குனர், ஆண் இயக்குனர் என்ற வித்தியாசம் போக வேண்டும்.

நான் நடித்த ‘ஓ பேபி’ தெலுங்கு படத்துக்கு இயக்குனரோடு சேர்ந்து 8 பெண்கள் வேலை செய்தோம். ஆண்களுக்கு இணையாக உழைத்தனர். ஒரு நாள் கூட படப்பிடிப்பில் தாமதம் ஏற்படவில்லை.எனக்கு திருமணம் ஆன பிறகு என்னை சந்திக்கும் பலரும் எப்போது குழந்தை பெற்றுக்கொள்வீர்கள் என்கிறார்கள். எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை எனக்கு இருக்கிறது. எப்போது தோன்றுகிறதோ அப்போது பெற்றுக்கொள்வேன். இவ்வாறு சமந்தா கூறினார்.

Related posts