குருதி மாற்றிப் பாய்ச்சியதில் சிறுவன் மரணம்?

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 9 வயது சிறுவனுக்கு குருதி மாற்றிப் பாய்ச்சியதில் ஏற்பட்ட மரணம் தொடர்பான வழக்குடன் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள், உட்பட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிசார் தவறியமையினால் இந்த வழக்கை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்குமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ. றிஸ்வான் நேற்று (07) கட்டளையிட்டார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த 9வயதுசிறுவன்ஜெயக்காந்தன் விதுலஷ்சன் கடந்த 1.3.2019வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தின் போது சிறிய காயங்களுடன் செங்கலடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் இரத்தம் மாற்றிப் பாய்ச்சியதால் மாச் 19ம் திகதி உயிரிழந்தார்.

இதனையடுத்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் குருதி மாற்றிப் பாய்ச்சியதால் தனது மகன் உயிரிழந்தாக முறைப்பாடு செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து கடந்த மாதம் 08ஆம் திகதி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு எடுக்கப்பட்ட போது சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிசாருக்கு கடந்த 4மாதங்களாக உத்தரவிட்ட நிலையில் கடந்த 7ம் திகதி (நேற்று 07புதன்கிழமை) நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் தவறின் இந்த வழக்கு விசாரணையை குற்றத்தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்படும் என பொலிசாருக்கு எச்சரித்து உத்தரவிட்டார்.

இன்று பதன்கிழமை காலை இந்த வழக்கை நீதிமன்றில் எடுத்தபோது ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த இரு தாதியர்களும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். இருந்தபோதும் ஏனைய சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தாத நிலையில் சந்தேகநபர்களை பகல் ஒரு மணிக்கு ஆஜர்படுத்துமாறு நீதவான் வழக்கை பிற்பகல் 1.30மணிவரைக்கும் பிற்போட்டார்.

மீண்டும் இந்த வழக்கை எடுத்தபோது பொலிசார் சந்தேக நபர்களை ஆஜர்படுத்தவில்லை. இதேவேளை ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த இரு தாதியர்களும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். நீதவான், பொலிசார் இந்த நீதிமன்ற நீதியை நிலைநாட்டவில்லை எனவும் இந்த வழக்கு விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் முன்னெடுத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அநீதிநிலை ஏற்படும். எனவே 2010ம் ஆண்டு சட்டத்தில் வைத்தியர்களை கைது செய்யமுடியாது எனவும் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவேண்டும் எனவும் பொலிசார் நீதிமன்றில் தெரிவித்து வந்துள்ளனர்.

ஆனால் சட்டமா அதிபரின் ஆலோசனையை கடந்த 4மாதங்களாக பெறாது பொலிஸ் அதிகாரிகள் இழுத்தடித்து வந்துள்ளனர். எனவே இந்த வழக்கு விசாரணை ஆவணங்களை பொலிசாரிடம் பெறப்பட்டு இந்த வழக்கு விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்குமாறும் இந்த வழக்கு சந்தேக நபர்களை கைது செய்யாததன் காரணம் என்ன என விசாரணையைமேற்கொண்ட மட்டக்களப்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிமீது விசாரணை மேற்கொள்ளுமாறும் பொலிசாருக்கு கட்டளையிட்டு இந்த வழக்கை எதிர்வரும் செட்டெம்பர் 4ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் – எம்.எஸ். நூர்டீன்)

Related posts