இறுதிவரை மகனைக் காணாது விடை பெற்ற தாய்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி நடாத்தப்படுகின்ற அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்து வந்த தனது மகன் மன்னார் பகுதியில் கடற்படையிடம் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவரை பத்து வருட காலத்துக்கும் மேலாக தேடி வந்த தாய் ஒருவர் மாரடைப்பு காரணமாக கடந்த 24 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவுகள் பலர் உயிரிழந்த நிலையில் இன்றும் எந்தவிதமான தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் உறவுகள் தொடர்ச்சியாக தங்களுடைய உயிர்கள் பிரிவதற்கு முன்பதாக உறவுகளை ஒரு நாளாவது எங்களோடு வாழ விடுங்கள் என கோரிக்கையை முன்வைத்துப் போராடி வருகின்ற நிலையிலும் அந்தக் கோரிக்கைகள் பலனளிக்காத நிலையில் குறித்த தாயாரும் இவ்வாறு உயிரிழந்திருக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஏற்கனவே தனது 2 மகன்களை பறிகொடுத்து 4 வது மகனாக குறித்த காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் மகனைத் தேடி வந்த புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியை சேர்ந்த செபமாலை திரேசம்பாள் என்ற தாயார் ஆவார்.

இவருடைய இறுதி அஞ்சலி நிகழ்வுகள் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

தற்போது அவரது பிரேதம் இரணைப்பாலை கிறிஸ்தவ தேவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நல்லடக்கம் நடைபெறும்.

Related posts