ஸ்ரேயாவை தேடும் இயக்குனர்

கோடீஸ்வரர் ஆவது எப்படி என்று நிறைய புத்தகங்கள் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர் ஒருநாள் தூக்கத்தில் ஸ்ரேயாவுடன் நடிப்பதுபோல் கனவு காண உடனே நடிக்க வந்துவிட்டார். இப்போது ஸ்ரேயாவை வலைபோட்டு தேடிக்கொண்டிருக்கிறார். இது நிஜமா என்றபோது எழுத்தாளர், நடிகர், இயக்குனர் ஏ.எல்.சூர்யா கூறியது:

நிஜம்தான். அனிதா பத்மா பிருந்தா என்ற நாவல் எழுதியிருக்கிறேன். சினிமாவை பின்னணியாக கொண்ட கதை. அந்த நாவல் எழுதும்போதுதான் ஸ்ரேயாவுடன் நடிப்பதுபோன்ற கனவு கண்டேன். பிறகு நாவலை படமாக்க முடிவு செய்ததுடன் தயாரிப்பு, இசை, பாடல், இயக்கம், நடிப்பு என எல்லா பொறுப்பையும் நானே ஏற்று செய்ய முடிவு செய்தேன்.

ஸ்ரேயாவை நேரில் சந்தித்து இந்த விஷயத்தை கூறி கால்ஷீட் கேட்க உள்ளேன். மேலும் 2 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். ஏற்கனவே 5 புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். தமிழ்நாடு, கேரளாவில் படப்பிடிப்பு நடக்கிறது. இதுவரை படப்பிடிப்பு நடக்காத பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த உளளதால் அந்த லொகேஷன் பெயர்களை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறேன்’ என்றார்.

Related posts